×

ரஷ்யாவில் எண்ணெய் பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் இன்ஜினுடன் தடம்புரண்டு பயங்கர தீ விபத்து..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு இன்ஜின் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. ரஷ்யா, உக்ரைன் உடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் இருநாட்டு எல்லைகளில் அவ்வப்போது குண்டுகள் வீசப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. நேற்று ரஷ்யாவின் பிரையான்ஸ்க் ரயில் நிலையத்தில் இருந்து உணச்சா நோக்கி சரக்கு ரயில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் ரயில் தடம் புரண்டது. நிலைமையை சுதாரிப்பதற்குள் இன்ஜின் தீ பற்றி அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவல் அறிந்து விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிலமணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே குண்டுவீச்சு தாக்குதலால் ரயில் தடம் புரண்டு தீப்பற்றி இருப்பதாக பிரையான்ஸ்க் ஆளுநர் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். இருப்பினும் உக்ரைன் அல்லது ரஷ்யா குண்டு வீசியதில் இந்த விபத்து நேர்ந்ததா? என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

The post ரஷ்யாவில் எண்ணெய் பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் இன்ஜினுடன் தடம்புரண்டு பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Burantu Engine Fire ,Dinakaran ,
× RELATED நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல்...