- லோடுமான்
- கம்பம் பேருந்து நிலையம்
- கம்பம்
- சின்னப்பன்
- ஆனைமலையன்பட்டி இந்திரா காலனி
- உத்தம்பாளையம்
- Kampam
கம்பம்: உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் (73). இவர் நேற்று முன்தினம் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் ஆனைமலையான்பட்டி செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது தான் கைப்பையுடன் வைத்திருந்த சுமார் இரண்டரை பவுன் தங்க மோதிரத்தை தவறவிட்டார். பின்னர் அந்த மோதிரத்தை பஸ் நிலையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னப்பன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் லோடுமேன் வேலை செய்து வரும் வடமல் (62) என்பவர் பஸ் நிலையத்தில் கிடந்த கைப்பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்க மோதிரம் இருந்துள்ளது.
உடனே மோதிரத்துடன் கூடிய கைப்பையை வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் ஒப்படைத்தார். அதனை சின்னப்பனிடம் போலீசார் வழங்கினார். பின்னர் மோதிரத்தை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த வடமலுக்கு போலீசார் சால்வை அனுவித்து பாராட்டினார்.
The post கம்பம் பஸ் நிலையத்தில் முதியவர் தவறவிட்ட நகை ஒப்படைப்பு லோடுமேனுக்கு பாராட்டு appeared first on Dinakaran.