×

பெண்ணை மிரட்டிய 3 ரவுடிகள் மீது வழக்கு

 

கோவை: கோவை புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதி பகுதியை சேர்ந்தவர் சுதா (39). இவர் மகனை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வழிமறித்து தகராறு செய்து தகாத முறையில் பேசியதாக தெரிகிறது.‌ இதை அறிந்த சுதா அவர்களிடம் விசாரிக்க சென்றார். அப்போது அங்கே இருந்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆவி வினோத் (25), பிரவீன் (34) சண்முகம் (26) ஆகியோர் சுதாவிடம் தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக சுதா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆவி வினோத், பிரவீன் ஆகியோர் மீது ஏற்கனவே கோவை நகர போலீசில் கொலை மிரட்டல். அடிதடி தகராறு மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்பாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ரவுடிகள் பட்டியலிலும் 3 பேர் பெயர் உள்ளது. போலீசார் இவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post பெண்ணை மிரட்டிய 3 ரவுடிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sudha ,Puliyakulam Karupparayan Koil Road ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...