×

மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி: இன்ஜினியர் உட்பட 3 பேர் அதிரடி கைது

காரியாபட்டி: நரிக்குடி அருகே மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான சம்பவத்தில் பிளான் இன்ஜினியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார்(15), ரவி செல்வம்(17). பள்ளி மாணவர்களான இவர்கள் விடுமுறையையொட்டி, நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் கட்டிட வேலைக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மதியம் கட்டுமானப் பொருட்களை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 2வது நாளாக நேற்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உடலை பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிளான் இன்ஜினியர் ஜெயசீலன்ராஜா, சூப்பர்வைசர்கள் விஜயராகவன், பால்சாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி: இன்ஜினியர் உட்பட 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Planan ,Narikudi ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்