×

இடிதாக்கி மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ.4 லட்சம் அமைச்சர்கள் வழங்கினர்

 

பெரம்பலூர்:பெரம்பலூரில் இடிதாக்கி மரணம் அடைந்த பெண்ணின் குடு ம்பத்தினருக்கு பேரிடர் மே லாண்மை நிதியின் கீழ் நி வாரண உதவித் தொகை யாக ரூ4 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், எள ம்பலூர் ஊராட்சிக்கு உட்ப ட்ட நான்கு ரோடு, முத்துல ட்சுமி நகரில், பூமாலை ராம சாமி என்பவருக்கு சொந்த மானகட்டிடத்தில் சித்தாளா க வேலை செய்து கொண்டி ருந்த பெரம்பலூர் தாலுக் கா கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுவாசல் கிராம த்தைச் சேர்ந்த முருகேசன், மனைவி சாவித்திரி (34) என்பவர் கடந்த 27ஆம் தே திமாலை 4.30மணியளவில் பெய்த மழையின்போது இ டி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு நிவார ணம் வழங்கும் வகையில், பேரிடர் மேலாண்மை நிதி யின் கீழ் நிவாரண உதவி யாக ரூ.4லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரம்பலூர்சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் நேற்று (29 ம்தேதி) வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் குன் னம் இராஜேந்திரன், பெரம் பலூர் மாவட்ட ஊரக வளர் ச்சி முகமைத் திட்ட இயக் குநர் லலிதா, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்திய பாலகங்கா தரன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சிவா, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இடிதாக்கி மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ.4 லட்சம் அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur, Nivarana ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...