×

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்களிடம் திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

 

கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற திமுக சார்பில் வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக ஆட்சியில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திண்ணை பிரசாரத்தில் வாக்குச்சாவடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவில் திமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் தொகுதிக்கு தங்க சங்கிலி பரிசு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க அதற்கு தேவையான ஆலோசனைகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் வி.பி.அண்ணாமலை தலைமையிலும், மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பா.ராமஜெயம் தலைமையில் நேற்று பொற்குணம், கமல புத்தூர், சாலையனூர், மல்லவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய தொழிலாளர்களிடம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர், அப்போது திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கிய சலுகைகள் குறித்து விளக்கிக் கூறி விவசாய தொழிலாளர்களை புதிய திமுக உறுப்பினர்களாக சேர்த்தனர்.

The post துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்களிடம் திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thuringiapuram union ,DMK ,Kalasapakkam ,Thuringiapuram ,Dinakaran ,
× RELATED கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...