×

கன்னிவாடி அருகே சரக்கு வாகனம்- பஸ் மோதிய விபத்தில் கோவை பெயிண்டர் பலி: 16 பேர் படுகாயம்

நிலக்கோட்டை, ஏப். 30: கன்னிவாடி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கோவையை சேர்ந்த பெயின்டர் பலியானார். 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையிலிருந்து தேனிக்கு வந்த அரசு பஸ், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வழியாக நேற்று காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது. டிரைவர் சவுந்தரராஜ பெருமாள் பஸ்சை ஓட்டி வந்தார். 45 பயணிகள் பஸ்சில் இருந்தனர். கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி பகுதியில் வந்த போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதி, பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கோவையை சேர்ந்த பெயிண்டர் ஐயப்பன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பஸ்சில் இருந்த மகாலட்சுமி (23), ஸ்வேதா (24), ரேவதி (23), மகேஸ்வரி (23), கார்த்திகேயன் (20), முருகேஸ்வரி (32), விசாலினி (14), கயல்விழி (12), டிரைவர் சவுந்தரராளஜ் (38), கண்டக்டர் வேல்முருகன் (35) உள்பட 16க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கன்னிவாடி போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னிவாடி அருகே சரக்கு வாகனம்- பஸ் மோதிய விபத்தில் கோவை பெயிண்டர் பலி: 16 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kanniwadi ,16 ,Coalkotta, Ap. 30 ,Goa ,Cove ,Dinakaran ,
× RELATED சொந்தமாக கார் கூட இல்லை அமித் ஷாவுக்கு...