×

தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் தம்பதி உட்பட 7 இலங்கை தமிழர் மீட்பு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி மணல்திட்டு பகுதியில் தம்பதி உட்பட 7 இலங்கை தமிழர்கள் மீட்கப்பட்டனர்.
இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் நியூட்டன் வில்லியம் (43), இவர், தனது மனைவி வனிதா (38), 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் 2 சிறுவர்களுடன் கடந்த 27ம் தேதி இரவு, இலங்கை தலைமன்னாரில் இருந்து படகில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டனர். அவர்களை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் உள்ள மணல் திட்டு பகுதியில் படகோட்டிகள் இறக்கி விட்டு இலங்கைக்கு திரும்பினர்.

இந்த தகவல் இந்திய கடலோர காவல்படையினருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்து கப்பல் மூலம் மணல் திட்டு பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல்படையினர், 7 பேரையும் மீட்டு அரிச்சல்முனைக்கு அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை, மரைன் போலீசார் அழைத்து சென்று விசாரணைக்கு பிறகு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

The post தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் தம்பதி உட்பட 7 இலங்கை தமிழர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dumbati ,Dhushkodi Sand Thatu ,Rameswaram ,Dumbatti ,Dhushkodi Sandalditu ,Newton ,Sri Lanka ,Dunushkodi Sand Thatu ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...