×

கோடை மழையை எதிர்நோக்கி கிராமங்களில் மானாவாரி பயிர் சாகுபடிக்காக விளை நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கோடை மழையை எதிர்நோக்கி, தங்கள் விளை நிலங்களை உழுது, மானவாரி பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில்,தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர்களான மக்காசோளம்,நிலக்கடலை,தட்டைபயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை,ஆடி மற்றும் தை பட்டத்தை எதிர்நோக்கி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.

இதில் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், விவசாயிகள் பலர், தங்கள் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட மானாவாரி பயிர் அறுவடைக்கு பிறகு, மீண்டும் மானாவாரி பயிரிட கோடை மழையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவ்வப்போது தொடர்ந்து சில மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் பலர், விளை நிலங்களில் லேசான ஈரப்பதம் ஏற்பட்டதையடுத்து, மானாவாரி பயிர் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்
இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் மக்காசோளம் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுவட்டாரத்தில் குறிப்பாக விந்தனூர்,சமத்தூர்,பொன்னாபுரம்,வடக்கிபாளையம்,சூலக்கல், ராசக்காபாளையம், மங்கலம்புதூர்,முத்தூர்,நல்லிகவுண்டன்பாளையம்,குள்ளக்காபாளையம்,கோட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை பயிரிட தங்கள் விளை நிலங்களினை ஏர்பூட்டி உழும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நிலத்தை உழுது செல்ல டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் சில கிராமங்களில் மாடு பூட்டி ஏர்உழும் பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோடை மழையை எதிர்நோக்கி, சாகுபடி செய்யப்படும் பயிர்கள் தளைக்க ஏதுவாக, இப்போதே உழவு பணி மேற்கொண்டு வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கோடை மழையை எதிர்நோக்கி கிராமங்களில் மானாவாரி பயிர் சாகுபடிக்காக விளை நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Ranawari ,Pollachi ,Pollachi Roundabout ,Manawari ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...