- சென்னை
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்தியல் திணைக்களம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகம்
- DMS
- தின மலர்
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரக கூட்டரங்கில், மாநில அளவிலான அனைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பயிற்சிப் பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘குடிநீர் மாதிரிகள் எடுத்து தரம் உள்ள வகையில் குடிநீர் தயாரிக்கப்படுகிறதா தரமான குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கிறார்களா என்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு இது கோடை காலம் என்பதால் போலியான குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பது என்பது காலங்காலமாக ஒரு சிலர் செய்து வரும் தவறுகள். அதையும் இன்றைக்கு முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
The post கேன் தண்ணீர் கண்காணிக்க உத்தரவு appeared first on Dinakaran.