×

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது

கடத்தூர், ஏப்.29: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி பகுதி சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் வைத்தீஸ்வரி (28). இவருக்கும் ஜங்காளப்பட்டி பகுதியை சேர்ந்த காமராஜ் (35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் கடத்தூரில் உள்ள மெடிக்கல் கடைக்கு வைத்தீஸ்வரி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் வைத்தீஸ்வரி பணிக்கு சென்று விட்டார். இருந்தபோதும் ஆத்திரம் தீராத காமராஜ், அவர் வேலை செய்யும் மெடிக்கல் கடைக்கு சென்று அங்கிருந்த வைத்தீஸ்வரியிடம் தகராறு செய்ததோடு கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, கைவிரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

The post மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddathur ,Maheeswari ,Chillaraalli ,Darmapuri district ,Kadathur ,udishwari ,
× RELATED குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலி: கணவருக்கு தீவிர சிகிச்சை