×

குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலி: கணவருக்கு தீவிர சிகிச்சை

பெரம்பூர்: கொளத்தூர் ஜிகேஎம் காலனி நபிகள் நாயகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (44), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). இவர்களுக்கு சாதனா 10 என்ற மகளும், 7 மாதத்தில் நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஏற்பட்ட தகராறில், உமா மகேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்த கோபாலகிருஷ்ணன் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். அப்போது அவர்மீதும் தீப்பற்றியது. இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அப்போது கீழே இருந்த நிஷாந்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது. 3 பேரையும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்ந உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணன் 40 சதவீத தீக்காயங்களுடனும், நிஷாந்த் லேசான தீக்காயங்களுடனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தசம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலி: கணவருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Gobalakrishnan ,Kolathur GKM Colony Prophet General Street ,Uma Maheeswari ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு