×

டூவீலர்கள் மோதி 2 வாலிபர்கள் பலி

பரமத்திவேலூர், ஏப்.29: பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 2வாலிபர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது நண்பர் வடிவேல். கூலித்தொழிலாளிகளான இவர்கள், திருச்செங்கோடு சாலையில் இருந்து பரமத்தி நோக்கி, டூவீலரில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஸ்டீபன்(24), கீதன்(24) ஆகிய இருவரும் ஒரே டூவீலரில், பரமத்தியிலிருந்து முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இலங்கை தமிழர் முகாம் அருகேயுள்ள நூலகத்திற்கு முன், எதிரெதிரே வந்த 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 4பேரும் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், ஸ்டீபன், முருகன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Paramathi ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்