×

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி: தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியின் பகுதிகளான வட்டகனல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியதிலிருந்து அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூன்றாவது முறையாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி வெள்ளப்பெருக்கு குறையும் வரை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

The post கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakkar ,Periyakulam ,West Consequencemalai ,Gunbar ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி