×

செய்யாறு அருகே கர்ப்பிணி காதலியை கொல்ல முயன்ற வாலிபர் கைது

செய்யாறு: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் படிக்கும் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியை அவரது உறவினர் ராஜவேலு (21), தினமும் கல்லூரிக்கு பைக்கில் அழைத்து வந்துள்ளார். அப்போது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியுடன் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்தனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாணவியை வெளியே அழைத்து சென்ற ராஜவேலு, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.

இதில் மாணவி கர்ப்பமானார். தற்போது 9 மாத கர்ப்பிணியான அவர், ராஜவேலுவை திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாணவிக்கு போன் செய்து, ‘திருமணம் விஷயமாக பேச வேண்டும்’ என கூறி நெடுங்கல் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு ராஜவேலு வரவழைத்தார். அங்கு பெல்ட்டால் மாணவியின் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றாராம்.இதுகுறித்து அனக்காவூர் போலீசில் கர்ப்பிணி மாணவி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜவேலுவை நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் ராஜவேலுவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post செய்யாறு அருகே கர்ப்பிணி காதலியை கொல்ல முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Valier ,Ranipetta District Arakonam Thaluga ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...