×

ஏ.டி.பி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கான அரசின் நிதியுதவியாக ரூ1 கோடிக்கான காசோலையை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஏ.டி.பி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கான அரசின் நிதியுதவியாக ரூ1 கோடிக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாநிலத்தில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. மேலும், நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர விளையாட்டுப் பயற்சி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல், போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் பொருட்டு மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய, பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் போது அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்துதல் ஆகிய சீர்மிகு திட்டங்களை முதலமைச்சர் தலைமையிலா அரசு செயல்படுத்தி வருகிறது.

இது தவிர, மாநிலத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதையும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் அமைப்புக்கு சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்து வருகிறது. தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.பி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளை (ATP Challenger 100 International Men’s Tournament) நடத்த 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 1 கோடி வீதம் வழங்க 30.03.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.04.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 12.02.2023 முதல் 19.02.2023 வரை நடைபெற்ற ஏ.டி.பி சேலஞ்சர் டூர் 100 இண்டர்நேஷனல் ஆண்கள் டென்னிஸ் போட்டிக்கான (ATP CHALLENGER TOUR INTERNATIONAL TENNIS TOURNAMENT – 2023) அரசின் நிதியுதவியாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் அவர்களிடம் வழங்கினார். அவ்வமயம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் தறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஏ.டி.பி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கான அரசின் நிதியுதவியாக ரூ1 கோடிக்கான காசோலையை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : PA ,Udhayanidhi Stalin ,B Chalenger ,TD ,Udhayavidhi Stalin ,Chalenger ,100 Adeavar International Tennis Match ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...