×

ரூ84 லட்சம் கள்ளநோட்டு பரிமாற்ற சம்பவம் கைதான 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

 

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் ரூ.84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மாற்றும் போது, 3 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் கடந்த 24ம் தேதி (திங்கள்) ரூ.84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பரிமாற்றம் நடைபெற்றபோது கோவை மாவட்டம் கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி, கணுவாயைச் சேர்ந்த சதீஷ் மற்றும் வையம்பட்டி அடுத்த லெச்சம்பட்டி தங்கவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதில் பார்த்தசாரதிக்கு சொந்தமான 2 சொகுசு கார்கள், அச்சடிக்கும் இயந்திரம், கணிப்பொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கோவை, கேரளா ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பார்த்தசாரதி, சதீஷ் மற்றும் தங்கவேல் ஆகியோரை நேற்று போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரூ84 லட்சம் கள்ளநோட்டு பரிமாற்ற சம்பவம் கைதான 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Vayambatti ,Manparai, Trichy district ,
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...