×

எழிலூர் சமத்துவபுரத்தில் ரூ.1.14 கோடியில் சீரமைப்பு பணி மும்முரம்

 

திருத்துறைப்பூண்டி, ஏப். 28: எழிலூரில் சமத்துவபுரத்தில் ரூ.1.14 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் நிறுவப்பட்டது. இந் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைபாடு நிலவி வந்த நிலையில் எம்எல்ஏ மாரிமுத்து கடந்தாண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சமத்துவபுரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்ததை அடுத்து ரூ 1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இதனை அடுத்து எழிலூர் சமத்துவபுரத்தை சீரமைக்க 1.14 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், எம்எல்ஏ மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் ஆகியோருகளுக்கு சமத்துவபுர குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post எழிலூர் சமத்துவபுரத்தில் ரூ.1.14 கோடியில் சீரமைப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Edelur Equality Puram ,Thirutharupundi ,Equality ,Pura ,Adelur ,Equality Puram ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு...