×

உலகக் கோப்பை வென்றதாக பணமோசடி மாற்றுத்திறனாளி வீரர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று முன்தினம் எஸ்.பி தங்கத்துரை தலைமையில் நடந்தது. இதில் சத்திரக்குடியை சேர்ந்த தினேஷ்குமார் அளித்த புகார் மனுவில், ‘‘சத்திரக்குடியை சேர்ந்த ஆனந்த் பாண்டியராஜ் என்பவர், என்னிடம் கடலாடி அருகே கீழச்செல்வனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான வினோத்பாபு (32), இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். அவர், 2022 டிசம்பரில் பாகிஸ்தான் கராச்சியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் வென்றார். அவர் லண்டனில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் கலந்து கொள்வதற்கு பணம் வசதியின்றி கஷ்டப்படுகிறார் என கூறினார். அதன்பேரில் வினோத்பாபுவிற்கு உதவிடும் நோக்கில் ரூ.1 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் போலியான உலகக்கோப்பையை காட்டி ஏமாற்றியதை அறிந்தேன். எனவே பொய் கூறி பணம் பறித்த வினோத்பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி தங்கத்துரை உத்தரவின்பேரில், ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வினோத்பாபு மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post உலகக் கோப்பை வென்றதாக பணமோசடி மாற்றுத்திறனாளி வீரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : World Cup ,Ramanathapuram ,Ramanathapuram SP ,SP ,Thangathurai ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...