×

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

குத்தாலம், ஏப்.27: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் தேர்தல்கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட வாழ்வாதார நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நேற்று குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வட்ட செயலாளர் அல்போன்ஸ்ராணி நன்றியுரையாற்றினார்.

The post பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Employees Association ,Kuttalam ,Tamil Nadu Government of Tamil Nadu ,Struggle Committee of the All Industrial Employees Unites ,Public Employees Association ,Dinakaran ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்