×

கபிஸ்தலம் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

 

தஞ்சாவூர், ஏப். 27:கபிஸ்தலம் அருகே உள்ள புளியம்பாடி கிராமத்தில் வசிப்பவர் குணசேகரன் மகன் சுரேஷ் (32). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (20). இவர்களுக்கு பிறந்து 35 நாட்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. சுரேசுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக் காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கபிஸ்தலம் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kapistalam ,Thanjavur ,Suresh ,Gunasekaran ,Puliyambadi ,Dinakaran ,
× RELATED கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது