×

திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் புதுச்சேரி பாஜ எம்எல்ஏ மீது சென்னை பெண் போலீசில் புகார்

புதுச்சேரி: சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (36). இவருக்கு பிரியதர்ஷிணி (14) என்ற மகளும், நிக்கேஷ்மாதவ் (12) என்ற மகனும் உள்ளனர். நேற்று புதுச்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கு அவரது புகாரை வாங்க மறுத்து வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர். இதையடுத்து எல்லம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவை காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் என்னை கடந்த 2008ல் காதலித்து திருமணம் செய்தார். தற்போது 2வது மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எங்களை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

இதனால் கடந்த 6 மாதமாக எங்கள் குடும்ப செலவுக்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் பணம் இல்லாமல் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது கணவரான எம்எல்ஏ கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு இனிமேல் உங்களை பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். எனது கணவருக்கு கவுன்சிலிங் கொடுத்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இது தொடர்பான புகாரை பெற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கல்யாணசுந்தரம் எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘இது பழைய கதை, நாங்கள் பிரிந்துவிட்டோம். என்னை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து கொள்கிறேன்’ என்றார்.

The post திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் புதுச்சேரி பாஜ எம்எல்ஏ மீது சென்னை பெண் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP MLA ,Chennai ,Ellammal ,Ramapuram ,Priyadarshini ,Nikeshmadhav ,
× RELATED உடல் பருமன் குறைப்பு சிகிச்சை: புதுச்சேரி இளைஞர் பலி