×

அனைத்து திருமணங்களிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும்; சானியாவுடன் ரம்ஜான் கொண்டாட விரும்பினேன்: சோயிப் மாலிக் பேட்டி

கராச்சி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (36) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை(41) காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த ஒருவருடமாக சானியா, சோயிப் மாலிக் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் விவாகரத்து செய்து விட்டதாக தகவல் பரவியது. இதனை சோயிப் மாலிக்கின் உறவினரும் உறுதி படுத்தினார்.

இந்நிலையில், கராச்சியில் தனியார் தொலைக்காட்சியில் ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோயிப் மாலிக், “ரம்ஜான் பெருநாளை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள். அனைத்து திருமணங்களும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து செல்கின்றன. ஆனால் அதற்காக உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் தொடர்பில் இருப்பதால் பிஸியான அட்டவணையை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிவதில்லை. எங்களுக்குள் பிரிவினை மற்றும் கருத்துவேறுபாடுகள் என வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை” என்றார்.

The post அனைத்து திருமணங்களிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும்; சானியாவுடன் ரம்ஜான் கொண்டாட விரும்பினேன்: சோயிப் மாலிக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Sania ,Shoaib Malik ,Karachi ,Sania Mirza ,
× RELATED ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்