×

பராமரிப்பு பணிகள் காரணமாக மருதூர் ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல்

 

குளித்தலை, ஏப். 26: பராமரிப்பு பணிகள் காரணமாக மருதூர் ரயில்வே கேட் 3 நாட்கள் மூடப்படுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மருதூர் – மேட்டு மருதூர் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இவ்வழியாக மருதூரில் இருந்து மேட்டு மருதூர், கூடலூர், பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, வளையப்பட்டி, மேலப்பட்டி, பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு விவசாயிகள் பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் இவ் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும் இப்பகுதி விவசாயிகள் விவசாய இடுபொருள்கள் எடுத்துச் செல்வதற்கு இந்த ரயில்வே பாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று ( 26ம் தேதி) காலை 8 மணி முதல் 28ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை என 3 நாட்களுக்கு இந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இந்த ரயில்வே கேட் வழியாக செல்பவர்கள், செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதுகுறித்த அறிவிப்பு மருதூர் ரெயில்வே கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் மருதூரில் இருந்து மற்ற கிராமப்புறங்களுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணிகள் காரணமாக மருதூர் ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Marudhur ,Railway Gate ,Marudhur Railway Gate ,Karur ,District… ,Marudur Railway Gate ,Dinakaran ,
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ...