×

குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

 

ஏழாயிரம்பண்ணை, ஏப்.26: வெம்பக்கோட்டை அருகே குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை அருகே க.மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கனி மகன் சக்திகுமார்(28). இவர் அப்பகுதியில் ஜேசிபி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலை செய்யும் முழு ஊதியத்தையும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு பணம் கொடுக்காமல் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சக்திகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரிக்கனி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Waliber ,Wembakota ,K. ,Wembakotta ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து