×

மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

 

தேவதானப்பட்டி, ஏப். 26: தேவதானப்பட்டி அருகே கல்லூரி மாணவியை தாக்கி கொ லை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் சரவண செல்வன் (26). இவரும், முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரவணச்செல்வனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மாணவி தன்னுடன் பேச வேண்டாம், பழக வேண்டாம், என்னை பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரவணச்செல்வன் மாணவியின் வீட்டு முன்பு நின்று தகராறு செய்துள்ளார். இதை தட்டி கேட்ட மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணச்செல்வனை கைது செய்தனர்.

The post மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Devdhanapatti ,Devadanapatti ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு