×

டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

 

திருவாடானை, ஏப்.26: திருவாடானை அருகே மூலவயலை சேர்ந்தவர் காளிமுத்து(68). இவர் டூவீலரில் ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது கோவிந்தமங்கலம் மேலமடை அருகே தடுமாறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயக்கமுற்று கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஆனந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் இறந்து விட்டார். திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Kalimuthu ,Moolawayal ,RS Mangalam ,Dinakaran ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்