×

(வேலூர்) சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் பேரணாம்பட்டில் பரபரப்பு

பேரணாம்பட்டு, ஏப்.26: பேரணாம்பட்டில் சிறுமி திருமணத்தை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி வட்டம் மதுரா ஹபீப் நகரை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், 17 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏரி குத்தி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், சமூகநல விரிவாக்க அலுவலர் தனலட்சுமி, குழந்தைகள் நல அலுவலர் பைரவி மற்றும் கிராம உதவியாளர் சின்னசாமி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதை எட்டாமல் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அரசு விதிமுறைகள்படி சிறுமிக்கு 18 வயது முடியும் வரை திருமணம் ஏற்பாடு செய்ய மாட்டோம் என்று பெற்றோரிடத்தில் உறுதி பெற்றனர். அதிகாரிகள் திடீரென திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post (வேலூர்) சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் பேரணாம்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Peranambat ,Peranampatu ,Peranampatu Lake ,
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை