×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

ஆவடி: ஆவடி அடுத்து திருநின்றவூர் வட்சலாபுரம் பகுதியைச் சேர்ந்த தாய் (35) இவரது மகள் (14) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தெருவில் நின்று கொண்டிருந்தபோது, சிறுமியிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் மர்ம நபர் அருகில் வந்துள்ளார். இதில், சிறுமியை கட்டிப்பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பயந்துபோன சிறுமி அங்கிருந்து தப்பிச்சென்று பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவரைப்பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (38) கட்டிட தொழிலாளி என தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்,

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Avadi ,Vatsalapuram ,Thiruninnavur ,
× RELATED பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில்...