×

மாமல்லபுரம் கார் விபத்து வழக்கு யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர்

சென்னை: மாமல்லபுரம் கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். மாமல்லபுரத்தில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழக்கு சம்பந்தமாக மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், எந்த வாய்தாவிற்கும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் யாஷிகா ஆனந்த் காலம் கடத்தி வந்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் செங்கல்பட்டு நீதிமன்றம் நடிகை யாஷிகா ஆனந்த்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து, இவர் கடந்த மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி தன்மீது பிறப்பித்த பிடிவாரன்ட்டை தளர்த்தக்கோரி மனு அளித்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நேற்று மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். அவரை மீண்டும் வருகிற ஜூலை 27ம் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

The post மாமல்லபுரம் கார் விபத்து வழக்கு யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,accident ,Yashika Anand ,Chennai ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!