திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திருவில்வாமலை பழையனூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ (8). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஆதித்யபரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் பழையனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
The post செல்போன் வெடித்து சிதறி 3ம் வகுப்பு மாணவி பலி appeared first on Dinakaran.