×

முதுமலையில் 2 யானைகள் பலி

ஊட்டி:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மாவனல்லா வனத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.இறந்து கிடந்தது 60 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும், வயது முதிர்வு காரணமாக இறந்ததும் தெரியவந்தது.இதேபோல கல்லம்பாளையம் பகுதியில் 50 வயது பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையும்,14ம் தேதி சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி வனத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானையும் உயிரிழந்தன.இந்த இரு யானைகளும் வேறு வேறு ஆண் யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து உயிரிழந்தது.இம்மாதத்தில் கடந்த 20 நாட்களுக்குள் முதுமலையில் 2 ஆண் யானைகள்,2 பெண் யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post முதுமலையில் 2 யானைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Avaralla forest ,Masinagudi Forest Reserve ,Tiger Reserve ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...