×

வாழ்வியல் சூழ்நிலையில் சிறந்து விளங்கும் கருங்குழி பேரூராட்சிக்கு ஒன்றிய அரசின் விருது

மதுராந்தகம்: வாழ்வியல் சூழ்நிலையில் சிறந்து விளங்கும் கருங்குழி பேரூராட்சிக்கு ஒன்றிய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வீட்டு வசதி துறையின் கீழ் ஹட்கோ எனப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வாழ்வியல், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருதை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக அளவில் முதன்மை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட கருங்குழி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஹட்கோ ஆய்வு செய்தது.

பின்னர், இந்த கருங்குழி பேரூராட்சியை தமிழக அளவில் சிறந்த வாழ்வியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற பேரூராட்சியாக ஹட்கோ தேர்வு செய்தது. அதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திப்பூரி, மத்திய வீட்டு வசதி கழகச் செயலாளர் மனோகர் ஜோஷி ஆகியோர் கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன், செயல் அலுவலர் கேசவன் ஆகியோரிடம் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

The post வாழ்வியல் சூழ்நிலையில் சிறந்து விளங்கும் கருங்குழி பேரூராட்சிக்கு ஒன்றிய அரசின் விருது appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Government of the Union ,Union Government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...