×

தூத்துக்குடி அருகே மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டி கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராமத்தில் உள்ள அலுவலகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் விஏஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் வெட்டினர். இதனை அடுத்து படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட லூர்து பிரான்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததே விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதுக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 13-ம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக விஏஓ லூர்து பிரான்சிஸ் புகார் அளித்திருந்தார். லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகாரின் அடைப்படையில் மணல் கடத்தல் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட நிலையில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

The post தூத்துக்குடி அருகே மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : VAO ,Tuticorin ,Thoothukudi ,VAO Lourdes ,Murappanadu ,Vallannadu, Tuticorin district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...