×

திருவாரூரில் குறைதீர் கூட்டம் மக்களிடமிருந்து பெறப்பட்ட 247 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை

 

திருவாரூர், ஏப். 25: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 247 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீ பெற்றுக்கொண்டார். அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 247 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு திருமண நிதியுதவி தொகைக்கான ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரமும், 2 நபர்களுக்கு விலையில்லா சலவைபெட்டியும் மற்றும் தமிழ் வளாச்சித்துறையின் சார்பில் 2021&-22ம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்ட 3 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையும், தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரம் முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழினையும் கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சிதம்பரம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாலசந்திரன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் குறைதீர் கூட்டம் மக்களிடமிருந்து பெறப்பட்ட 247 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Sarusree ,Thiruvarur ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...