×

தா.பழூர் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் திருட்டு

 

தா.பழூர், ஏப்.25:தா.பழூர் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்களை திருடிச்சென்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் ஆண்டிமடத்தில் உள்ள மருமகளை பார்க்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று சாந்தியின் மகள் ரம்யா தாய் வீட்டை பார்க்க வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறைகள் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

இதனையடுத்து தாய் சாந்திக்கு ரம்யா தகவல் கொடுத்தார். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 5 பவுன் நகை மற்றும் ரூ.30ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் திருட்டு சம்பவம் குறித்தும் மர்ம நபர்கள் குறித்தும், போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தா.பழூர் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tha. Tha.Bahur ,Tha.Bahur ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...