×

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

பெரம்பலூர், ஏப்.25: பெரம்பலூரில் ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்களை திருடிச்சென்றனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்துலட்சுமி நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகரன் (35). இவரது மனைவி ரங்கீலாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். பெரம்பலூரில் மணிமேகரன் தனது தாய் சந்தானலட்சுமியுடன் வசித்து வருகிறார். மணிமேகரனின் தந்தை ராமராஜ், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் கிராமத்தில் மரப்பட்டறை நடத்தி வருவதால், அங் கேயே உள்ள வீட்டில் தங்கிக் கொண்டு மர வியாபாரத்தைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி மாலை தந்தையை பார்ப்பதற்காக மணிமேகரன் தனது தாய் சந்தான லட்சுமியை அழைத்துக் கொண்டு வாலிகண்டபுரம் சென்றார். பின்னர் 22ம்தேதி இரவு பெரம்பலூருக்கு திரும்பியுள்ளனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் மோதிரம், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மணிமேகரன் பெரம்பலூர் போலீசில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் காவல் துறையின் கைரேகை பிரிவு, மோப்பநாய் பிரிவு வரவ ழைக்கப்பட்டு கொள்ளையர்கள் தொடர்பான தடையங்கள் சேகரிக்கப்பட்டன. பெரம்பலூர் நகரில் ஒரு மாத த்திற்கு பிறகு மீண்டும் வீடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவம் தொடர்வது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி