×

பைக் மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாப பலி

 

செய்யூர்: செய்யூர் அருகே பைக் மீது கார் மோதியதில் இளம் பெண் சம்பவ இடத்திலேலே பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகள் ரம்யா (21). இவர், படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் என்பவருடன் ரம்யா, கடப்பாக்கத்தில் இருந்து நல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ரம்யா, சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த கோபிநாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இறந்த ரம்யாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

The post பைக் மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Seiyur ,Chengalpattu ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!