×

ராணுவ வாகனம் மீது தாக்குதல் 40 பேரிடம் போலீசார் விசாரணை

பூஞ்ச்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழன்று ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி-பூஞ்ச் இடையே வீரர்கள் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். விசாரணையில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு தாக்குதலுக்கு முன்னதாக வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து ஸ்னிப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் வீரர்களால் உயிர்தப்ப முடியவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் இந்த பணி நீடித்தது. பாடா துரியன் -டோடா கலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கூடுதல் வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்தின்பேரில் 40 பேரை காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

The post ராணுவ வாகனம் மீது தாக்குதல் 40 பேரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Poonch ,Bimberkali-Poonch ,Rajouri ,Kashmir ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!