×

சூதாடிய 18 பேர் கைது 5 பைக் பறிமுதல்

 

திருப்பூர்,ஏப்.24: திருப்பூர் ராயபுரத்தை அடுத்த சூசையாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர். பின்னர் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த வீடு தேவராஜ் என்பவருடையுதும், அங்கு ஆட்டோ குண்டு பாபு என்பவரின் தலைமையில் 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 18 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 450 பணம், 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் தகவல்

The post சூதாடிய 18 பேர் கைது 5 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Soosaiyapuram ,Tirupur Rayapuram ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...