×

விவசாய கிணற்றில் டைலர் சடலம்

மீட்புமோகனூர்: மோகனூர் அருகே பரளி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கிணற்றில் சடலமாக கிடந்தவர் பரளி அருகே கடக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த வரதன் மகன் சத்யமூர்த்தி என்பது தெரியவந்தது. அணியாபுரத்தில் டைலர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவி கோமதி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விவசாய கிணற்றில் டைலர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Tyler ,Mohanur ,Parali ,Mohanur.… ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு