×

எச்.எம்.எஸ். நிர்வாகிகள் அவசர கூட்டம்

 

கோவை, ஏப். 23: கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்) நிர்வாகிகள் அவசர கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார். இதில், ‘’12 மணி நேரம் வேலை என்ற தொழிலாளர் சட்ட விதிகளை திருத்தம் செய்ததை மாற்றி, மீண்டும் 8 மணி நேரம் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும். வரும் மே 1ம்தேதி அனைத்து கிளை சங்கங்களிலும் மே தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொருளாளர் ஜி.மனோகரன், செயலாளர்கள் மோகன்ராஜ், தேவராஜன், உதவி செயலாளர் தங்கராஜ், துணை தலைவர்கள் மருதாசலம், ஆர்.தங்கவேலு, சிறப்பு அழைப்பாளர்கள் கே.பழனிசாமி, எஸ்.ஆர்.சண்முகம், என்.நாகராஜ், தென்றல் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post எச்.எம்.எஸ். நிர்வாகிகள் அவசர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : HMS ,Coimbatore ,Coimbatore District Panchalay Labor Union ,Singhanallur ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...