×

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது: சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

 

நத்தம், ஏப். 23: ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று கொண்டாடினர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான இப்பண்டிகைக்காக 30 நாட்கள் நோன்பிருந்து தொழுகை நடத்தி, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதம் முதல் பிறை பார்த்து 30 நாட்கள் நோன்பை துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை ஷவ்வால் முதலாம் பிறை பார்த்து நேற்று ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

The post திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது: சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Dindigul district ,Natham ,Muslims ,Ramzan festival ,Muslims'… ,Dindigul ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...