×

சிறுமியை தூக்கிசென்று பாலியல் கொடுமை: டிரைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமம் சந்தை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(38), டிரைவர். இவர் கடந்த 3.8.2014 அன்று அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு நண்பர் ஒருவருடன் ஜோதிடம் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை, ஒதுக்குப்புறமான இடத்துக்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமியின் உடல் நலன் பாதிக்கப்பட்டது.

இதனால் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் போளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக, சிறுமியின் தாய், போளூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, நேற்று அளித்த தீர்ப்பில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட டிரைவர் ரமேசுக்கு ஆயுள் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 4 வயது சிறுமியிடம் மிகக்கொடூரமாக நடந்து கொண்டிருப்பதால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ரமேசை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை தூக்கிசென்று பாலியல் கொடுமை: டிரைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Ramesh ,Market Methut Street, ,Elathur village ,Kalasappakkam, Thiruvannamalai district ,
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...