×

காங்கிரஸ் விளையாட்டு துறை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை: பெரம்பூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பெரம்பூர் பகுதியில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு துறை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விளையாட்டு துறை மாநில தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லி பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘சுதந்திர போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியோடு இணைந்து இஸ்லாமியர்கள் செய்த தியாகத்தை நம்மால் மறக்க முடியாது. இந்த புனிதமான நாளில் அவர்களின் தியாகத்தை நாம் போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி மட்டும் அல்லாமல், நலத்திட்ட உதவிகளையும் பெரம்பூர் பகுதியில் நிசார் வழங்கி வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்’’ என்றார். நிகழ்ச்சியில், மூத்த துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, துணைத் தலைவர் இதயத்துல்லா, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம், மாநில செயலாளர் அகரம் கோபி மற்றும் கொளத்தூர் கோபால் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் விளையாட்டு துறை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Iftar ,Congress Sports Department ,K.S.Azhagiri ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,KS Azhagiri ,Perampur ,Perambur ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை