×

திருவள்ளூர் அருகே காக்களூரில் வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யமுனா(52). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்கிற சிங் சுதர்சன் (30) சென்று, ‘ உன் கணவர் எத்திராஜ் எங்கே’’ என்று கேட்டுள்ளார். இதற்கு யமுனா, ‘’வெளியே போய் இருக்கிறார்’’ என சொன்னதும் சுதர்சன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தாக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன யமுனா கூச்சல் போட்டதால் அவரது உறவினர்கள் விஜி, தீபிகா ஆகியோர் ஓடி வந்து கேட்டுள்ளனர்.

இதனால் அவர்களையும் தகாத வார்த்தைகளால் சுதர்சனம் பேசியதுடன் தாக்க முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சதர்சன் செல்லும்போது, ‘’வீட்டை பார்த்துட்டேன்…. உன் கணவர் வெளியே வந்தால் கொலை செய்து விடுவேன்’’ அவர் எங்கு வேலை எடுத்து செய்தாலும் மாமூல் தர வேண்டும்’’ என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதுசம்பந்தமாக யமுனா கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து சுதர்சனை தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே காக்களூரில் வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Kakalur ,Tiruvallur ,Thiruvallur ,Yamuna ,Mariyamman Koil Street, Kakkalur ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்