×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கோடநாடு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் முகாம் அலுவலகமாகவும், வசித்த இடமாக இருந்ததுதான் கோடநாடு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் பங்களாவில் இது போன்ற சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. கோடநாடு வழக்கில் 306 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் உரிய விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து இருந்தால் வழக்கை விரைவாக முடித்திருக்க முடியும்.

அதிமுக அரசின் மெத்தனப்போக்கால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. கோடநாடு வழக்கில் திமுக அரசு நிச்சயம் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்; வழக்கு போட்டு இருக்கிறோம், திமுகவினர் மீதே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவேண்டாம் என்று தெரிவித்தார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Codanadu ,Chief of Legislation ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Kodanadu ,Jayalalithah Amman ,Codanade ,B.C. ,
× RELATED ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10...