×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், ஏப்.20: காஞ்சிபுரத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கவுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது. இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
இதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் (21.4.2023) நாளை காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Arthi ,Kanchipuram District Collector ,Sector ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அரசு பள்ளியில் முதலிடம்:...