×

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர், ஏப். 20: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நாளை(21ம் தேதி) புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண் சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.இதற்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படும். இவ்வாய்ப்பை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore District ,Collector ,Balasubramaniam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை