கர்நாடகா: மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மைசூரு நகரில் ஹூப்ளி தொழில் பூங்கா பகுதி உள்ளது. இந்த தொழில் பூங்காவில் தனியார் பட்டாசு குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோனில் திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, குடோன் முழுவதுமாக வெடித்து தரைமட்டமானது. குடோனை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வரை குடோனில் எத்தனை பேர் வேலை செய்துக் கொண்டிருந்தனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
தகவல் அறிந்து 16 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த பலமணி நேரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, எதனால் வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மைசூரு அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; 2 கி.மீ. தொலைவிற்கு எழுந்த புகைமூட்டம்.. 10 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முயற்சி..!! appeared first on Dinakaran.